வித்தியாசமான பைக்


தேவையே கண்டுபிடிப்புக்களின் தாய்… என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இந்த பழமொழிதான் விஞ்ஞான உலகை இயக்கிக்கொண்டிருக்கிற ஒரு உந்து சக்தி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நித்தம் ஒரு கண்டுபிடிப்பு, நித்தம் ஒரு கருவி அல்லது எந்திரம் என்று விஞ்ஞானம் தன் பணியை தொடர்ந்து வருவதற்கு இந்த சக்தி தான் காரணமாக உள்ளது.
வாகன பெருக்கம், விரிவுபடுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாத குறுகிப்போன சாலைகளால் திணறாத நகரங்களே உலகில் இல்லை.
இதில் சீனாவும் விதிவிலக்கல்ல. சீனாவின் ஷாங்காய் நகருக்கு சென்றிருந்த பெஞ்மின் குலாக் என்னும் 17 வயது அமெரிக்க சிறுவனுக்கு வித்தியாசமான ஒரு `ஐடியா’ உதித்தது.
நெருக்கடி மிகுந்த சாலைகளில் பயன்படுவது போல் ஒரு சிறிய இருசக்கர வாகனத்தை கண்டு பிடித்தால் என்ன என்பது தான் அது.
அந்த எண்ணத்தின் வடிவம் தான் இந்த இளைஞன் வடிவமைத்துள்ள பாட்டரியில் இயங்கும் `யுனோ’ என்னும் பைக். யூ 3 ஸ்டிரிட் பைக் என்றொரு செல்லப்பெயரும் இதற்கு உண்டு. மித வேகத்தில் ஒரு சைக்கிளைப்போலவும், அதிக வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிளை போலவும் ஓடுகிறது. இது சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலென்ன ஆச்சரியம்? இது போன்ற பைக்
குகள் தான் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டதே என்கிறீர்களா? இந்த பைக்கின் விஷயமே வேறு. இந்த பைக்கில் குறைந்த இடைவெளியில் இரண்டு பின் சக்கரங்களும் ஒரு முன் சக்கரமும் அமைக்கப்பட்டுள்ளது. ஓடாத போது மடங்கி பின் புற சக்கரங்களுடன் ஐக்கியமாகி இருக்கிறது முன் சக்கரம். துவக்கத்தில் இணையான பின்புற சக்கரங்களை மட்டுமேபயன்படுத்தி ஒரு சைக்கிளை போல் ஓடும். வேகமெடுத்தவுடன் ஒரு பட்டனைத்தட்டினால் முன்புற சக்கரங்கள் விமானத்தின் சக்கரங்களைப்போல் முன்னோக்கி வெளியே வந்து தரையில் பதிந்து ஓடுகிறது. நெருக்கடியான இடங்கள்; அவ்வளவு ஏன்? கட்டிடங்களுக்குள்ளே எடுத்து செல்லலாம். வீடு பலமாடி கட்டிடத்தில் இருந்தால் இந்த பைக்கை லிப்டுக்குள் அடக்கி சுலபமாக எடுத்து செல்லலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 48 முதல் 56 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது இந்த பைக். அதிக பட்சமாக மணிக்கு 48 கிலோமீட்டர் இதன் வேகமாகும். இதை வடிவமைக்க பெஞ்சமின் பயன்படுத்தியவை எவை தெரியுமா?
ஒரு ஜாய்ராஸ்கோப், ஒரு வீல் சேர் மோட்டார் மற்றும் அதற்கான பாட்டரிகள். தேவையான பிற கருவிகளையும் உபகரணங்களையும் தன் தாத்தாவிடம் இரவலாக வாங்கியதாக கூறுகிறார் இந்த எதிர்கால விஞ்ஞானி.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


இதயம் தனக்குத் தானே பழுதுநீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் செல்லை இடம்மாற்றம் செய்வதன் மூலம், சேதம் அடைந்த செல்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது, இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்ப்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.
தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரிசெய்யமுடியாத நிலையே இன்றும் இருக்கிறது.
இறந்த செல்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான ரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.
பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப்பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர்கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரிசெய்யும் முயற்சியில்தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப்படும் குறிப்பிட்ட செல்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன.அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



`மொழி’ என்றதுமே அது மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு ஓடுகிறது. ஆனால் மொழியும், மொழி சார்ந்த பிரச்சினைகளும் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. தவளைகளும், தேரைகளும் கூட அவற்றின் சொந்த மொழியில் பேசிக்கொள்கின்றன.
சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. தவளைகளும், தேரைகளும் ஒன்று ஒன்று தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் ஒலி சமிக்ஞை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
தவளைகளும், தேரைகளும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை தங்களுக்கே உரிய பிரத்தியேக மொழிகள் மூலம் தத்தமது இனத்துக்கு இடையே தொடர்பு கொள்கின்றன.
நூற்றுக்கணக்கான தவளைகள் ஒரே சமயத்தில் ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். பொதுவாக இனச்சேர்க்கைக்காகவே தவளைகள் இப்படிக் குரல் கொடுக்கின்றன.
ஒரு பெண் தவளை இந்தப் பெரிய கூச்சலுக்கு நடுவே தனது வகையைச் சேர்ந்த ஆண் தவளையின் குரலைத் தனியாக இனங்கண்டு கொண்டு அதைத் தேடிச் சென்று இனவிருத்தி செய்கிறது என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் என பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறோம் என, நெஞ்சை நிமிர்த்தி சொல்வதில் பெருமை தான். அதேவேளையில், கலாசார சீரழிவு, ஒழுக்கக் கேட்டிலும் நாம் மேற்கத்திய நாடுகளுக்கு, இணையாக வளர்ந்து வருவது வேதனையான விஷயம்.
எப்படி அமெரிக்க கோதுமையோடு, பார்த்தீனியம் விதைகளும் நம் நாட்டுக்குள் இறக்குமதியாகி, கேடு விளைவித்து வருகிறதோ, அதுபோல் நவீன தொழில்நுட்பத்தோடு, மேற்கத்திய கலாசாரமும் இங்கு இறக்குமதியாகி, நமது சமூகத்தை சீரழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புகை, மது, திருமணத்துக்கு முன் உறவு- இதெல்லாம் கூடாது என நமது முன்னோர்கள் ஒதுக்கினார்கள். ஆனால், நாகரிகம் என்ற போர்வையில், இதையெல்லாம் நியாயப்படுத்த பார்க்கிறது இன்றைய இளைய தலைமுறை.
இந்திய இளைஞர்களிடையே புகைப் பழக்கமும், மது பழக்கமும் அதிகரித்து வருவது சமீபத்திய ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.
இதில், திடுக்கிடும் தகவல் என்னவெனில், மது குடிக்கும் இந்திய இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தான். 2000ம் ஆண்டு நடந்த ஆய்வில் இந்தியாவில் 5 சதவீத பெண்களுக்கு மதுப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் வருகைக்குப் பின், இப்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெங்களூருவில் படித்த இளம் ஆண்களுக்கு இணையாக இளம் பெண்களும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி. தொழில் இந்தியாவுக்கு எத்தனையோ நன்மைகளை கொடுத்திருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், சில தீமைகளை கொண்டு வந்துள்ளதுதான் துரதிருஷ்டமானது.
கர்ப்ப காலத்தில் மதுவின் ஆபத்து
மேற்கத்திய நாடுகளில் பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம். இவ்வாறு குடிப் பழக்கம் உள்ள பெண்கள் அந்த பழக்கத்தை விட முடியாமல், கர்ப்ப காலத்திலும் குடிப்பதால், கர்ப்பத்தில் உள்ள குழந்தை, மன ரீதியிலும், உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கர்ப்பகாலத்தில் குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை, 4 லட்சம் என ஓர் ஆய்வில் தெரியவந்தது. 1,000 குழந்தைகளில் 2 குழந்தைகள் கர்ப்ப கால மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மது அரக்கன், வளரும் கருவையும் விட்டு வைக்கவில்லை. விழித்துக் கொண்ட மருத்துவ உலகம், “அட, கர்ப்ப காலத்திலாவது குடிப்பதை நிறுத்திவிடுங்கள். அப்போது தான் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்’ என வலியுறுத்தி வருகிறது. இந்த பிரசாரம், இந்தியாவுக்கும் தேவைப்படும் சூழ்நிலை, இப்போது உருவாகி உள்ளது.
பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக, அந்த காலத்தில் பிரசவத்தின் போது பெண்களுக்கு மது கொடுக்கும் பழக்கம், இந்தியாவில் இருந்துள்ளது. ஆனால், மயக்க மருத்துவ துறை வளர்ச்சியால் அதற்கெல்லாம் இப்போது அவசியமில்லாமல் போனது.
தொப்புள் கொடி உறவு
கர்ப்பத்தின் போது மதுக் குடிப்பதால், தாயின் ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், குழந்தையின் தொப்புள் கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் சென்று பல்வேறு கேடுகளை செய்கிறது.
நாள் ஒன்றுக்கு 15 மி.லி., வரை ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், போதைக்காக மகிழ்ச்சிக்காக, கிளர்ச்சிக்காக குடிப்பவர்கள் 150 மி.லி.,யில் கூட நிறுத்தமாட்டார்கள்.
கர்ப்ப காலத்தில் மது குடிப்பதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, வாரிசுகளின் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிவிடும்.
ஆரோக்கிய மனிதர் மது குடித்தால் கூட, முதலில் நரம்பு மண்டலத்தில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
தொப்புள்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் ஊடுருவும் ஆல்கஹால், முதலில் நரம்பு மண்டலத்தை தான் பதம் பார்க்கிறது. நரம்பு மண்டலம் பாதிக்கும்போது, உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு குழந்தையின் குணாதிசயங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. குழந்தை மூர்க்கனாக, மூடனாக பிறக்கும் வாய்ப்புள்ளது.
நமது குணாதிசயங்கள் கருவிலேயே தீர்மானிக்கப்படுவதால், கர்ப்ப பையில் மதுவை ருசிக்கும் குழந்தையின் பழக்க, வழக்கங்கள் முற்றிலுமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.
மூளையில் தொடங்கி…
மூளையில் தொடங்கி, குழந்தையின் கபாலம், கண், இதயம், தண்டுவடம் உட்பட எந்த உறுப்பையும் மது விட்டு வைக்காது என்பது, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவுத் திறன் மிக குறைவாக இருக்கும்.
இதனால் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த முடியாது.
இதயத்தில் பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும். குறைந்த எடை அல்லது அதிக எடையுடன் பிறக்கும். கண் சிறுத்து போகும்.
மதுவினால் ஏற்படும் பாதிப்பு குழந்தை பருவத்தோடு நின்றுவிடுவதில்லை, உயிர் பிரியும் வரை உடனிருந்து தொல்லை கொடுக்கும்.
இது தவிர, மதுக் குடிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பிரசவ கால சிக்கல் ஏற்படும்.
எனவே, எப்போதும் மது நல்லதல்ல. அதுவும் கர்ப்பத்தின் போது, ஒரு துளி மதுவும் குழந்தைக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து, பெண்கள் மதுவுக்கு விடை கொடுப்பது நல்லது.
கர்ப்பத்தின் போது மது குடிப்பதால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்
* தலை அளவு சிறுத்திருத்தல்
* பிறவி இதயக் குறைபாடுகள்
* சிறுநீரகங்களில் குறைபாடு
* சராசரி உயரத்தை விட குறைந்த உயரம்
* குறைந்த எடை
* பார்வை திறன் மங்குதல்
* செவித் திறன் குறைபாடு
* புத்தி மந்தம்
* மற்றவருடன் அனுசரித்து செல்லாமை
* மூர்க்கதனம், முரட்டுதனம்
* ஞாபகத் திறன் குறைவு
* படிப்பில் கவனக் குறைவு
* கற்றலில் குறைபாடு
* பேச்சுத் திறன், மொழித் திறன் குறைவு
அளவோடு குடிப்பது நல்லதா
மதுவை அளவோடு குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற வாதத்தில் சிறிதும் உண்மை இல்லை. 15 மி.லி., வரை ஆல்கஹாலை உடல் ஏற்கும் என்பது உண்மை தான். ஆனால், போதைக்காக குடிப்பவர்கள், 15 மி.லி.,யுடன் நிறுத்த முடியாது. பெண்கள் பீர் குடிக்கலாம். அதில் தீங்கு அதிகம் இல்லை என்ற கருத்தும் அபத்தமானது. கர்ப்பத்தின் போது ஒரு துளி மதுவும், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்கவேண்டியதிருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத்தில்தான் பெண் தெய்வமான காளி தேவியை எட்டுக்கைகளுடன் படைத்தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்களே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உணரத் தயங்குகிறார்கள்.. என்று புது விளக்கம் தருகிறார்கள், இன்றைய புதுமைப் பெண்கள்!
`இந்த விளக்கம் சூப்பராகத்தான் இருக்கிறது. இப்போது இந்தியாவே நவராத்திரி விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நவராத்திரி விழா பெண்களின் சிறப்பை எப்படி எடுத்துரைக்கிறது என்பதை சொல்லுங்களேன்..?’ என்று கேட்டால், இவர்கள் தரும் பதில் சுவாரஸ்யமானது. பெண்கள் பெருமைப்படத்தக்கது.
“நவராத்திரி விழா துர்க்கை அம்மனை சிறப்பிக்கும் விழா என்று அறியப்பட்டாலும், துர்க்கையின் பிரதிநிதிகளாக இந்த உலகில் வாழும் பெண்களை, பெண்மையை சிறப்பிக்கும் விழா அது என்பதுதான் உண்மை. அதனால்தான் இந்த விழாவில் சிறுமிகள் முதல் சுமங்கலி பெண்கள் வரை அத்தனை பேரும் கவுரவப்படுத்தப்படுகிறார்கள்.

அன்பு, கருணை, தாய்மை, தைரியம், எதிரிகளை அழிக்கும் ஆற்றல், அழகுணர்வு, கலை உணர்வு, கர்வம், கனிவு போன்ற ஒன்பது விதமான குணங்கள் எல்லா பெண்களிடமும் இருக்கவேண்டும். இத்தனை தன்மைகளையும் கொண்ட பெண்களால்தான் இந்த உலகில் சிறப்பாக வாழ முடியும். அதை பிரதிபலிக்கும் விதத்தில்தான் நவராத்திரியில் துர்க்கை அம்மனை ஒன்பது குணங்கள் கொண்டவளாக, ஒன்பது விதமாக அலங்காரம் செய்கிறோம். இந்த விழாவினை பெண்கள் கொண்டாட தயாராகும்போதே இந்த ஒன்பது குணாதிசயங்களும் தங்களிடம் இருக்கிறதா என்று ஆத்மபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று தங்களிடம் இல்லாவிட்டால்கூட அதை உணர்ந்து, இந்த விழாக் காலத்தில் அந்த குணத்தையும் உருவாக்கி முழுமை நிறைந்த பெண்களாக தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அன்பு, பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மிகப்பெரிய சொத்து. பெண்களிடம் எப்போதும் அன்பு வற்றாத ஜீவநதிபோல் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான் துர்க்கையை அன்பின் சின்னமாக நவராத்திரியில் ஒருநாள் அலங்காரம் செய்து வழிபட்டு மகிழ்கிறோம். கருணை என்றாலே நமக்கு கடவுளும், தாயும்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கருணையின் வடிவம்தான். பெண் எப்போதும் கருணைமிக்கவளாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், துர்க்கையை ஒருநாள் கருணை நிறைந்தவளாக உருவகப்படுத்தி, அலங்காரப்படுத்தி நவராத்திரி வழிபாடு செய்கிறோம்.
தாய்மை பெண்களின் தனிப்பெரும் சொத்து. தாய்மை உணர்வால் பெண், எல்லா உயிர்களையும் தன் உயிராக நினைக்கும் பக்குவ நிலைக்கு உயர்கிறாள். அதனால் துர்க்கையை தாய்மையின் சின்னமாகவும், நவராத்திரியில் பெருமைப்படுத்தி, பெண்களின் சிறப்பை மேம்படுத்திக்கொள்கிறோம்.
பெண்களிடம் கருணை, கனிவு, அன்பு போன்ற அனைத்தும் இருந்தாலும் அவர்கள் அநீதிகளைக் கண்டால் சினந்தெழுந்து அதர்மக்காரர்களை அழிக்க தயங்கக்கூடாது என்பதை துர்க்கை வழிபாடு நமக்கு காட்டுகிறது. அநீதி நிகழ்ந்தபோது அந்த துர்க்கையே சினந்தெழுந்து அசுரர்களை அழித்தார் என்று கூறி, பெண்களிடம் எப்போதும் போராட்டக்குணம் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது. அதனால்தான் துர்க்கை மகிஷனை வதம் செய்ததை நினைவுகூர்ந்து, அவளை மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகிறோம்…” என்று நீண்ட விளக்கம் தருகிறார்கள், ஆன்மிக ஆர்வலர்களான பார்வதி பாலசுப்பிரமணியனும், ஸ்ரீரஞ்சினி மோகன்குமாரும்!
“அலங்காரம் என்பது பெண்மைக்கே உரிய விஷயம். அழகுணர்ச்சி கொண்ட பெண், தான்நேசிக்கும் எல்லாவற்றையும் அழகு படுத்திப்பார்ப்பாள். தனது குழந்தையையும் அழகுபடுத்துவாள். தான் வழிபடும் கடவுளையும் அலங்காரத்தால் அழகுபடுத்துவாள். பெண்களிடம் இருக்கும் அழகுணர்ச்சி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் நவராத்திரி விழாக்காலத்தில் ஒன்பது நாளும், ஒன்பது விதமாக துர்க்கையை பெண்கள் அலங்காரம் செய்கிறார்கள். அந்த அலங்காரம் அவளது திறமையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மகிழ்ச்சியையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டையும் பெற்றுத் தருகிறது. நாங்கள் நவராத்திரியில் துர்க்கையை அலங்காரம் செய்வதில் எப்போதும் தனிக்கவனம் செலுத்துவோம். வருடத்திற்கு வருடம் அதில் புதுமைபடைத்து எங்களுக்குள் இருக்கும் அழகுபடுத்தும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்..” என்கிறார், சுஷ்மா.
நவராத்திரி பட்சணங்கள் பக்கம் தன் பேச்சை திருப்புகிறார், சுபாஷினி.
“மனிதர்கள் உயிர்வாழ முக்கியமானது உணவு. சுவையும், குணமும், நிறமும், புதுமையும் இருந்தால்தான் அதை நாம் விரும்பி உண்போம். பட்சணங்களில் சுவையைவிட ஆரோக்கியம் மிக முக்கியம். பெண்கள் அனைவரும் சமையலை கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் சமைக்கும் உணவில் புதுமை, ருசி, ஆரோக்கியம் போன்றவை இருக்கவேண்டும் என்பதை, நவராத்திரி போன்ற பண்டிகைகள் மக்களுக்கு கற்றுத் தருகின்றன. ஒன்பது நாளும் கடவுள் பெயரால் வெவ்வேறுவிதமான உணவுகளை சமைத்து, கடவுளுக்கு படைத்து நாம் உண்ணுகிறோம். இப்போது டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களுக்கு சமைக்கத் தெரியாது என்று சொல்வதை பேஷனாகக் கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல, எல்லோரும் சமைக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை பண்டிகைகாலங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. நான் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும், குறைந்தது நாலைந்து புதிய உணவுவகைகளையாவது கற்றுக்கொள்வேன்” என்கிறார், அவர்.
கொலு வைப்பதன் தத்துவம் உணர்த்தும் விஷயங்களை புதுமையாக விளக்குகிறார், ஆகாங்ஷா.
“கொலுவைப்பது என்பது பொம்மைகளை வரிசையாக அடுக்கிவைத்து, அழகு பார்ப்பது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல உண்மை. கலைநயம், சேகரிப்பு திறன், அழகின் வெளிப்பாடு, பொறுமை, நிறங்களின் தன்மையை புரிந்து கொள்ளல், படைத்தல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை கொலு நமக்கு சொல்லித்தருகிறது.

பொம்மை தயாரிப்பது என்பது குடிசைத் தொழில்போல் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. விழாக்களின் பெயரில் பொம்மைகளை வாங்கி, அந்த குடிசை தொழிலாளர்களை ஊக்குவிப்பது நம் கடமையாகும். ஒரு பெண் பொம்மைகளைவாங்க முன்வருகிறாள் என்றாலே, அவள் அதை உருவாக்கும் கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் நல்ல மனதை பெற்றிருக்கிறாள் என்று அர்த்தம். ஒரு பெண்ணிடம் எப்படிப்பட்ட கலைநயம் இருக்கிறது என்பதை அவள் பொம்மைகளை தேர்ந்தெடுப்பதைவைத்து கண்டுபிடித்துவிடலாம். வாங்குதல், சேகரித்தல், அவைகளை அடுக்குதல், பாதுகாத்தல் போன்றவைகளில் ஈடுபடும்போது அந்த பெண்ணிடம் நிதானம், பொறுமை போன்றவை ஏற்பட்டுவிடுகிறது. பொம்மைகளை வாங்கும் விதத்திலும், அவைகளை வரிசைப்படுத்தி கொலுவில் அடுக்கும் விதத்திலும் நிறங்களை வகைப்படுத்தும் அறிவு எந்த அளவுக்கு அந்த பெண்ணிடம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதனால் கொலு என்பது பார்த்து ரசிக்கும் ஒரு விஷயம் அல்ல. பெண்களின் அழகுணர்ச்சி, உள்ளத்தின் உணர்வுகள், மகிழ்ச்சி, உதவும்தன்மை போன்ற பலவிஷயங்களையும் கொலு வெளிப்படுத்துகிறது..” என்கிறார்.
“பெரும்பாலான விழாக்கள் பெண்களுக்கு வேலை சுமையை உருவாக்கிவிடும். வேலை சுமை உருவாகும்போது, பெண்களுக்கு ஓய்வற்ற உழைப்பும், சோர்வும் ஏற்பட்டு அந்த விழாவை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடும். ஆனால் நவராத்திரி விழா பெண்களின் அழகு, ஆட்டம், மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண்கள் அழகழகாக உடை அணிந்து, ஆடிப் பாடி மகிழ்வார்கள். வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்த நடனங்கள் மிக இன்றியமையாதவை. பெண்கள் சிறுவயதில் இருந்தே கலாசார நடனங்களை கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கையின் எல்லா காலங்களிலும் அந்தந்த விழாக்களின்தன்மைக்கு தக்கபடி அவர்கள் ஆடவேண்டும். மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆடவேண்டும் என்றால், ஆரோக்கியமான உடல் தேவை. அதனால் அழகு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவைகளை எல்லாம் பெண்களுக்கு தரும் விதத்திலும், பெண்மையின் சிறப்புகளை ஆண்கள் உணர்ந்து அவர்களுக்கு மதிப்பு தரும் விதத்திலும் நவராத்திரி பண்டிகை இருக்கிறது. அது கடவுள் வழிபாட்டோடு இந்த உலகுக்கு உணர்த்தப்படுகிறது..” என்கிறார், சஞ்சனா.
பண்டிகைகளில் பக்திக்கு அப்பால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா! நவராத்திரி விழா இன்றைய பெண்களுக்கு இருக்கவேண்டிய ஒன்பது குணாதிசயங்களைக் கொண்ட வித்தியாசமான முகங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது என்பது பெண்களுக்கு பெருமைதரும் விஷயம்தான்!
நன்றி-தினத்தந்தி
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பலில் 240 தொன் வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.

கப்பல் 1941, பெப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம்.

அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


இந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இளங்குழந்தைப் பள்ளி ஆசிரியையான NOORSYAIDAH என்பவரின் உடம்பில் தான் அதிசயமான முறையில் 10 – 20 Cm நீளமான இரும்புக்கம்பிகள் கடந்த 18 ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம்பிகள் கடந்த 1991ல் தான் முதன் முதலில் இவரது உடம்பில் அவதானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு சமயம் இவர் உடம்பிலிருந்து கம்பி வீழ்வதை கண்டுள்ளார். அதிலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளது. வளர்ந்த கம்பிகள் விழாமல் தொடர்ந்து வளர்வதை அவதானித்துள்ளார். இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது உடம்புக்கு வெளியே வளரும் அதே போன்ற கம்பிகள் உடம்பினுள்ளும் வளர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வரிய நிகழ்வு பற்றி இந்தோனேசிய சுகாதார அமைச்சும், வைத்திய நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவரது சகோதரி கூறுகையில், அவரது உடம்பில் வளர்ந்த கம்பிகளை வெட்டி அகற்றுவதற்கு அவர் முயற்சித்த போது, அது உடம்பின் வேறொரு பாகத்தில் மீண்டும் வளர்வதை அவதானிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். நான்கு பேர் அடங்கிய வைத்திய நிபுணர் குழுவொன்று இவரது உடம்பை படம் பிடித்து பார்த்த போது அவரது அடி வயிற்றுப்பகுதியில் 40 க்கும் அதிகமான கம்பிகள் காணப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati










நன்கு பிரபலமான மொபைல் போன் கடையொன்றில் ரகசிய கமராவினால் (CCTV) எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. ஒரு இளம்பெண் வடிவிலான பேய் ஒன்று நிற்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன.

பேய் வடிவிலான இளம்பெண் கடையின் பின் கதவுப் பக்கம் கடந்து போவது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. குறித்த உண்மையான காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து துறை சார் நிபுணர்களினால் ஆராயப்பட்டது.

ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இந்தக் காட்சிகளை youtube இல் பதிவு செய்த Andrew Dasilva கருத்து தெரிவிக்கையில், இந்தக் காட்சிகளை பார்த்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து விட்டேன்.. என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை... எனக் குறிப்பிட்டிருந்தார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். அதில் நம்மில் சிலருக்கு பாம்பு என்கின்ற பெயரை கேட்டாலே பயம் ஏற்படும். ஆனால் இந்த மெடுஸா மீட் என்ற பாம்பு தான் உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படுகின்றது. இது 25 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட இந்த பாம்பு பெண் இனத்தை சேர்ந்தது. இதனை 15 பேர் சேர்ந்து தான் தூக்க முடியும். ஒரு வாரத்திற்கு 40 கிலோ எடையுள்ள விலங்கை உணவாக சாப்பிடுகின்றது. ஆனால் 100 கிலோ எடையுள்ள விலங்கை எளிதாக இதனால் உண்ண முடியும்.







இதன் பயிற்சியாளர் லாரி எல்கர் கூறுகையில் மெடுஸாவை நினைத்து அனைவரும் பயப்படுகின்றனர். அது நியாயம் தான் எனக்கும் அந்த பயம் உள்ளது. ஆனால் மெடுசாவில் 18 அடி நீளம் எப்பொழுதும் மயக்க நிலையில் இருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன். ஆதனால் மெடுசாவை குறித்து பயபட வேண்டிய அவசியமில்லை. மெடுசா உகின் மிகப் பெரிய பாம்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டி காத்திருக்கின்றேன்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

சிலரை பார்த்து நம் உறவினர் போல இருக்கிறது ஆனால் அவர் இல்லை, உருவம் ஒரே மாதிரி இருகின்றதே என்று குழம்பி இருப்போம். இந்த குழப்பம் மனிதருக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் எற்படுகின்றது. அதிலும் குறிப்பாக மனிதர்களின் மூதாதயர் என்று சொல்லப்படுகின்ற குரங்குகளிடம் ஆச்சரியமூட்டும் அபூர்வமான உருவ ஒற்றுமை காணப்படுகின்றதாம்.
உலக அளவில் சுமார் 264 வகையான குரங்குகள் காணப்படுகின்றது அதில் இப்பொழுது பாதி அழியும் தருவாயில் இருகின்றது. சில விசித்திரமான குரங்குகளை நீங்களும் பாருங்கள்.

















Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ஒரு wingsuit பைலட் மலைப்பகுதியிலிருந்து ஒரு குறுகிய பிளவு மூலம் அதிக உயரம் சென்று சாதனை படைத்திருக்கிறார்.


ஹெலி ஒன்றில் 6000 அடி உயரத்திலிருந்து தன்னை தயார் படுத்திக்கொண்டார் Jeb Corliss , 75mph வேகத்தில் வீசும் காற்றுக்கு குறுக்காக சீனாவின் ஹுனன் பகுதியில் Tianmen mountain எனப்படும் மலைத்தொடரிலே இந்த சாகசத்தை நிகழ்த்தினார்.

கால்கள் மற்றும் உடல் இடையே மெல்லிய சவ்வு போன்ற அமைப்பே இவரை காற்றில் நிலையாக வைக்க உதவுகிறது.

உயரம் அதிகமாகும் போது ஏற்படும் புவியீர்ப்பு மாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படித்தியே இவரின் பறப்பு அமைந்தது.

தனது தலைக்கவசத்தில் இருந்த வீடியோ கமரா மூலம் மிகவும் துல்லியமாக படங்களும் எடுக்கப்பட்டது.

மலையின் நடுவே இயற்கையாக அமைந்த குகை போன்றதொரு பகுதியினூடாக மிக வேகமாக நுழைந்து மறுபகுதியினூடாக வெளிவந்தார்.

இந்த சாகச நிகழ்வை கண்டுகளிக்க மலையடிவாரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati