ஒரு wingsuit பைலட் மலைப்பகுதியிலிருந்து ஒரு குறுகிய பிளவு மூலம் அதிக உயரம் சென்று சாதனை படைத்திருக்கிறார்.


ஹெலி ஒன்றில் 6000 அடி உயரத்திலிருந்து தன்னை தயார் படுத்திக்கொண்டார் Jeb Corliss , 75mph வேகத்தில் வீசும் காற்றுக்கு குறுக்காக சீனாவின் ஹுனன் பகுதியில் Tianmen mountain எனப்படும் மலைத்தொடரிலே இந்த சாகசத்தை நிகழ்த்தினார்.

கால்கள் மற்றும் உடல் இடையே மெல்லிய சவ்வு போன்ற அமைப்பே இவரை காற்றில் நிலையாக வைக்க உதவுகிறது.

உயரம் அதிகமாகும் போது ஏற்படும் புவியீர்ப்பு மாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படித்தியே இவரின் பறப்பு அமைந்தது.

தனது தலைக்கவசத்தில் இருந்த வீடியோ கமரா மூலம் மிகவும் துல்லியமாக படங்களும் எடுக்கப்பட்டது.

மலையின் நடுவே இயற்கையாக அமைந்த குகை போன்றதொரு பகுதியினூடாக மிக வேகமாக நுழைந்து மறுபகுதியினூடாக வெளிவந்தார்.

இந்த சாகச நிகழ்வை கண்டுகளிக்க மலையடிவாரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.
தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதி செய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்: ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.
பரிசோதனை: ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ் கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்த போது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.
தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.
தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை.
ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை: ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால் நமது பெளதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

தண்ணீரின் மேல் நடக்கமுடியுமா என கேட்கவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் வகையில் நீரின் மேல் நடந்து சாதனை படைத்து விட்டார்கள் மனிதர்கள். 

கற்பனையில் எண்ணிப்பார்க்காத பல விடயங்களை இன்று மனிதன் சாதனையாக செய்து கொண்டிருக்கிறான். நீரில் படகு சவாரி செய்யலாம் ஆனால் சைக்கிள் சவாரி செய்ய முடியுமா? என்ன வியப்பாக இருக்கிறதல்லவா? முடியாது என நினைத்துவிடாதீர்கள்.

அதையும் சாதித்து காட்டியுள்ளான் ஒரு இளைஞன். இது பற்றி ஆங்கில இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தி ஒன்றில்  Matt menage எனும் 16 வயது இளைஞன் 75 அடி ஆழமான ஏரியின் மேல் சைக்கிள் ஓட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன்  பாதிக்கப்பட்டவர்களுக்கா நிதி திரட்டுவதற்காகவே இவ்வாறு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் இளைஞனின் சாதனை தொடர்பாக புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

குறித்த புகைப்படங்கள் ஒரு கிராபிக்வேலை என பலர் குறிப்பிட்ட போதிலும் இது உண்மையில் இடம்பெற்ற சாதனை எனவும் இச்சம்பவத்தை நேரில் பலர் கண்டுகளித்துள்ளதாகவும் இவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர்.

இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை.










Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


”மனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள்”. ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த்திருக்க மாட்டீர்கள்.. காட்டு விலங்குகள் எப்படி போதை ஏற்றும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆம் காட்டில் வளரும் ஒரு வகை மரத்தின் பழங்களில் தான் போதை காணப்படுகிறது.

இது தெரியாமல் விலங்குகளும் அவற்றை புசித்து உண்டு போதை தலைக்கேறி தள்ளாடி விழுத்து திரிகின்றமையை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப்பழம் மருளா பழம் என்று அழைக்குப்படுகிறது.

இவ்வகை பழங்கள் ஆபிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப்பழங்களை பறித்து ஆபிரிக்கர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மதுபானங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆபிரிக்க காடுகளை அண்டி வாழும் குடிவாசிகளும் இவ்வகை பழங்களை புசித்து வருகிறார்கள். இந்தப்பழங்களை புசித்த யானை முதல் குரங்கு வரை போதையில் போடும் ஆட்டங்களை நீங்களும் ரசியுங்கள்
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 டன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் கடந்த 2005-ம் ஆண்டு செயல் இழந்தது.

விண்வெளியில் செயலற்ற நிலையில் இருந்த அந்த செயற்கைகோள் மெல்ல மெல்ல நகர்ந்து பூமியை நெருங்கியது. 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அதன் 500 கிலோ பகுதி சிதறல் நேற்று கனடாவில் ஓகோடோக்ஸ் என்ற இடத்தில் விழுந்தது. இது பூமியில் விழுந்த போது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழந்த மற்றொரு செயற்கை கோள் பூமியை நோக்கி வருகிறது. அது ஜெர்மனியால் விண்ணில் அனுப்பப்பட்டது. “ரொசாத்” என அழைக்கப் படும் இந்த செயற்கைகோள் கடந்த 1999-ம் ஆண்டிலேயே செயல் இழந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இது விண்ணில் இருந்து படிப்படியாக நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. 2 முதல் 4 டன் எடையுள்ள அந்த செயற்கைகோள் பூமியை நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அது இன்னும் 5 வாரத்தில் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை நெருங்கும்போது தூள் தூளாக நொறுங்கி வெப்பத்தில் எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ஆ.... ஆ... என்ன? இது?.......


ந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவிட்ட யோகா, அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களை சந்தித்து வருகிறது. பாம்பு யோகா, பல்லி யோகா, பாலியல் யோகா என்றெல்லாம் அதற்கு புதுமையாக பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி புகழ்பெற்று வருவது `டாகா’ எனும் யோகா!
செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை மனிதர்களுடன் சேர்த்து `டாகா’ எனும் `டாக் யோகா’ கற்றுத்தரப்படுகிறது. வழக்கமாக உடலை வளைத்து செய்யும் `யோகப் பயிற்சிகளுடன் நாய்களையும் சேர்த்துக் கொள்வது ஆத்ம தொடர்பை விரைவுபடுத்தும்’ என்று பயிற்சி தருபவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
போர்ட்லண்ட் நகரில் 60 வயதான ஜூலி லாரன்ஸ் `டாக் யோகா’ பயிற்சி அளிக்கிறார். அவர் சொல்கிறார்:
“யோகா 2 ஆயிரத்து 500 ஆண்டு காலமாக செய்யப்பட்டு வருகிறது. அதனால் அது பழமையான கலையாக இருந்து வருகிறது. எல்லா விலங்குகளும் மற்ற உயிரினங்களுடன் ஒரு இணக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றன. மனிதனுக்கும் மற்ற விலங்குகளோடு இணக்கம் உண்டு. செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய், நம்மைப் புரிந்துகொண்டு நம்மோடு இணக்கமாகப் பழகுகிறது. யோகக் கலை என்பது இணக்கமாக வாழும் முறையை கற்றுத் தருவதாகும். எனவே நாயையும் இணைத்து செய்யப்படும் யோகக் கலை இணக்கமான ஆத்ம வாழ்வுக்கு சிறந்த வழியாகும். அதை பின்பற்றுவதுதான் உண்மையான யோகியின் கொள்கையுமாகும். நாங்கள் கற்றுத் தரும் டாக் யோகா பயிற்சி மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உள்ள ஆத்ம தொடர்பை அதிகரிக்கிறது”- என்கிறார்.
நாயுடன் (டாக்) இணைத்து செய்யப்படும் யோகா என்பதால் இதனை (டாக்+ யோகா) `டாகா’ என்று குறிப்பிடுகிறார்கள்.
யோகா பயிற்சி செய்பவர்கள் முதலில் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். டாகா முறையில் சூரிய நமஸ்காரம் செலுத்துவதற்கு, பயிற்சியாளர் தளர்வாக நின்று கொள்கிறார். பிறகு கைகளால், நாயின் கால்கள் அதன் உடலுடன் இணையும் பகுதியில் பிடித்து தூக்கி உயரத்தில் நிறுத்து கிறார். அதாவது வழக்கமான சூரிய நமஸ்காரத் தில் புதிதாக நாயை சேர்த்து தூக்கிக் கொள்கிறார்கள். இதுபோலவே தொடர்ந்து இதர யோகாசனங்களையும் நாயுடன் இணைந்து செய்கிறார்கள்.
இந்த பயிற்சி மையங்கள் அமெரிக்காவில் நிறைய திறக்கப்படுகின்றன. சீனாவைச் சேர்ந்த பெண் களும் பயிற்சி அளிக்கிறார்கள். செல்லப் பிராணிகளின் பிரியர்களான பெண்களும், சிறுவர் களும் நாய்களுடன் சென்று குதூகலமாக இந்த `டாகா’வை கற்கிறார்கள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.
இதேபோல், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.
அதோடு, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.
மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது. அதற்கு சில டிப்ஸ்…
* குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
* குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
* நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சினஅசைவில் இருந்து கூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்தகணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.
தொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போது தான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட `வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் `அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கை தான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.
சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல்நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்…இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். `குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.
இதில் கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் `இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.
அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.
நாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் `நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.
சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை `இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்’ என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


மின்சாரமில்லாமலேயே செல்போன் பாட்டரி சார்ஜானால்? நினைத்தாலே சந்தோசமாக இருக்கிறது. நடந்தால்? அதுவும் எப்படி? செல்போனில் பேசி கொண்டிருக்கும்போதே. இந்த கனவு நனவாகும் காலம் தொலைவிலில்லை.
செல்போனில் பேசும்போது உண்டாகும் ஒலியை மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்சாரம் செல்போனின் பாட்டரியை சார்ஜ் செய்ய போதுமானது. அது மட்டுமல்ல, பேசாத போதுகூட வெளியிலுள்ள சப்தங்கள் மற்றும் போனிலுள்ள ஆடியோ ஒலியை கூட மின்சாரமாக மாற்ற இயலும் என்பதுதான் இந்த கண்டுபிடிப்பின் ஹைலைட்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் ஓசையை ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படுத்த முடியுமா என்று எழுந்த கேள்விதான் இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. சுமார் 100 டெசிபல் அளவிலான ஒலியிலிருந்து 50 மில்லி வோல்ட் மின்சாரத்தை பெற முடியுமென்றும் கண்டுபிடித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



”அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.
இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :
எதிர்பார்ப்பில்லாத அன்பு
அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.
தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.
அரவணைப்பு அவசியம்
தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
கட்டிப்பிடி வைத்தியம்
ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

  
ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான 'Theory of Relativity' யை விஞ்ஞானிகள் தவறென நிரூபித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளனர்.

ஒளி (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீட்டர்.

எனினும் அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் வேகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அண்மையில் பறக்கும் குட்டி தேவதை எனும் விசித்திரமான உயிரினம் ஒன்று பிடிபட்ட செய்தியினை பிரசுரித்திருந்தோம். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதைவிட விசித்திரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தடவியல் மற்றும் ஆய்வாளர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்தியுள்ளது இச்சம்பவம்.

குறித்த இச்சம்பவம் தொடர்பாக ஆங்கில இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி பின்வருமாறு:-

இங்கிலாந்தின் நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம உயிரினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்த உயிரனத்தின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதுபற்றி உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்ட தடவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மைத்தன்மைகள கண்டறியாது குழப்பத்தில் உறைந்து போயுள்ளார்கள்.

இந்த விசித்திர உயிரினத்தை முதன் முதலில் பார்த்த கிராமவாசி இது பற்றி குறிப்பிடுகையில்:-

இவ்வுருவத்தை முதலில் நான் பார்த்தவுடன் ஒரு சிசுவின் உடல் என நினைத்து உடனடியாக பொலீசாருக்கு எனது செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். பின்னர் அவர்கள் அவ்விடத்திற்கு வரும் முன்னர் நான் அருகில் சென்று பார்த்த போது வியப்படைந்தேன். காரணம் அது உண்மையில் ஒரு சிசுவின் உடல் அல்ல மாறுபட்ட ஒரு தோற்றத்துடன் காணப்பட்டது . இதனால் அதனை என்னவென்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை.என தெரிவித்தார்.

குறித்த உருவத்தை ஆய்வுளுக்காக எடுத்து சென்ற தடவியல் நிபுணர்கள் புறஊதா கதிர்வீச்சுப்படம் எடுத்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுவரை அடையாளம் காணப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறித்த உருவம் 10-20 செ.மீ நீளமுடன் மிகச்சிறிய அளவில் காணப்பட்டுள்ளது. மேலும் இதன் எலும்புகள் ஒரு சிசுவின் எலும்புகளை ஒத்ததாகவும் உடல் அமைப்பு மனித உடலமைப்பை ஒத்ததாகவும் காணப்படுகிறது.
முழுமையான 2கால்கள் மற்றும் கைகளுடன் தலையில் மெல்லிய திசுவுடன் மஞ்சள் நிறத்தில் முடி காணப்படுகிறது. கைகளில் சாதாரண மனிதர்களுக்கு உளள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் காணப்படுகிறது. இன்னுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதன் முதுகுப்பகுதியில் இலைகள் போன்று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமையும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிறவுண் (டீசழறn)நிறத்தில் காணப்படும் இதன் இறக்கை தூரப்பார்வைக்கு அச்சு அசல் ஒரு இலையாகவே காணப்படுகிறது.

இது பற்றி கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள் இது உரு மனித உருவமா? அல்லது பறவையா? அல்லது பூச்சி இனமா? என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இது பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாக உள்ளது எனவும் மனித இனம் எனின் இனப்பெருக்க உறுப்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த உயிரினத்துக்கு இவ்வாறு இருக்கவில்லைஇ மற்றும் இறந்த நிலையிலும் இது துர்நாற்றம் எதுவும் வீசவில்லை எனவே எமக்கு இது பெரும் வியப்பை தந்திருக்கிறது என குறிப்பிட்டார்கள்.


Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




















































கண்ணை இமை காப்பது போல பிள்ளைகளைக் காப்பது தான் அம்மாவின் வேலை.. ஆனால் இங்கே உள்ள அம்மாப் பறவை தன் பிள்ளைகளை இறகுகளுக்குள் எவ்வளவு அன்பாக பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றது என்று பாருங்கள்...

இரண்டு குஞ்சுப் பறவைகளையும் தனது இரண்டு இறகுகளுக்குள்ளும் வைத்து கங்காரு தன் குட்டிகளை வயிற்றுப் பையில் பாதுகாப்பது போலப் பாதுகாக்கின்றது.

கொடுத்து வைத்த குஞ்சுப் பறவைகள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பொதுவாக சின்ன வயதில் பூச்சாட்டி காட்டியே எம்மை வெருட்டி வைப்பார்கள். இருள் தொடங்கினாலே பயம் எம்மை தொற்றிக் கொள்ளும்.


ஆனால் இங்கு ஒருத்தர் பார்ப்பதற்கே பயங்கரமாக காட்சி தருகிறார்.

ஜெர்மன் நாட்டவரான ரோல்ஃப் பக்ஹோல்ஸ் (Rolf bucholz) தனது முகம் முழுவதும் 168 துளைகள் இட்டு பயங்கர தோற்றத்துடன் பச்சை குத்தியுள்ளார்.

அண்மையில் ஜெர்மர் தலைநகரில் நடைபெற்ற பச்சை குத்துபவர்களுக்கான கண்காட்சி நிகழ்ச்சியின் போதே ரோல்ஃப் பக்ஹோல்ஸ் பங்கு பற்றியிருந்தார்.

இன் நிகழ்வில் சுமார் 200 பச்சை குத்தும் கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ரோல்ஃப் பக்ஹோல்ஸ் 2012ம் ஆண்டுக்கான உலக கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.



Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati








































காலங்காலமாக இறந்த உடலை ஊர் முழுவதும் எடுத்துச்சென்று சுடலையில் அடக்கம் செய்வதுவந்தோம் . காலம் மாறிவிட்டது, தற்போது பரவலாக காணப்படும் மின்னடுப்பு மூலமான தகனம் போன்ற அமைப்பை உடைய ஆனால் தொழிற்பாட்டில் வேறுபட்ட முறையொன்று உருவாகியிருக்கிறது body liquefaction எனப்படும் உடலை நீர்மமாக்குதல் ,

சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த முறை இலகுவானது , Glasgow-based company மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது , 180C வெப்பத்தில் உடல் மூன்று மணித்தியாலங்கள் வரை தகனம் செய்யப்படும் , பின்னர் நீரினால் நிரப்பப்பட்டு நீர் வெளியேற்றி மூலம் செறிவான திரவமாக மாற்றப்படும் ,

பச்சை மற்றும் கபில நிறமான இத்திரவத்தை நினைவுப்பூங்கா போன்ற இடங்களில் பசளையாகவும் பயன்படுத்தலாம் , அல்லது கழிவறை அமைப்பு மூலம் இலகுவாக அப்புறப்படுத்தலாம் இதன் ஆரம்பகட்டமாக சில இறந்த உடல்களை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




உலக இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.
இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.
Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்...
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati








இந்திய பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நில அமைப்புகள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக அமெரிக்காவின் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்பீல்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் அவர் தெரிவித்த தகவல்கள்: பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பது போல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டிரயாசிக் காலத்தின் போது லாரேசியா, கோண்ட்வானா என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன.
டேதிஸ் கடலால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த டேதிஸ் கடலில் இருந்து எழுந்த ஆழிப் பேரலை, குரியுல் கணவாய் பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கிறது. டேதிஸ் கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்திய பெருங்கடலாக மாறியது.
காஷ்மீரின் குரியுல் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு விதமான படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளை சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பால்ட் மீட்டர் இணையதளத்தை இணைய நீதிமன்றம் என்று சொல்லலாம். அதற்காக வழக்கு தொடுக்க முடியும் என்று பொருள் இல்லை.
இங்கு வக்கீல்களும் கிடையாது. வாதமும் கிடையாது. ஆனால் நீதிபதிகள் உண்டு. உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கோ, உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விக்கோ இங்கே தீர்ப்பை பெறலாம்.
அதாவது நான் செய்தது தவறா என்று இங்கு கேட்டு அதற்கான பதிலை பெறலாம். இந்த கேள்வி உள்ளவர்கள் உங்கள் கதையை சொல்லி யார் பக்கம் நியாயம் என்று தீர்ப்பு சொல்ல கேட்கலாம்.
உதாரணத்திற்கு உங்கள் நண்பர் துரோகம் செய்து விட்டதாக நீங்கள் நினைத்து உள்ளம் குமுறலாம். அப்போது யாரிடமாவது நடந்ததை சொல்லி யார் செய்தது சரி என்று கேட்க விரும்புவீர்கள் அல்லவா? இது போன்ற நேரங்களில் இந்த தளத்தில் உங்கள் கதையை சமர்பித்து இதன் உறுப்பினர்களிடம் நியாயம் கேட்கலாம்.
உறுப்பினர்கள் உங்கள் கதை படித்துவிட்டு தங்கள் ஆமோதிப்பு அல்லது எதிர்ப்பை வாக்குகளாக தெரிவிப்பார்கள். உங்களுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தால் நாம் எந்த தப்பும் செய்யவில்லை என்று நீங்கள் நிம்மதி அடையலாம். வாக்குகள் குறைவாக இருந்தால் உங்கள் பக்கம் தவறு இருக்கலாம் என்பதை ஏற்று கொள்ள வேண்டும்.
வாக்கு செலுத்துவதோடு உறுப்பினர்கள் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை கருத்துக்களாக பதிவு செய்யலாம். பிரச்சனையை புரிந்து கொண்ட வகையிலோ அல்லது ஆறுதல் வார்த்தைகளாகவோ அவை அமையலாம்.
இதெற்கெல்லாமா கவலைப்படுவது என்பது பொலவோ இது எல்லோரும் செய்யகூடியது தான் என்று யாராவது சொல்லும் போது குற்ற உணர்ச்சியில் தவிப்பவர்கள் சமாதானமாகலாம்.
இதற்கு மாறாக எதிர் தரப்பின் நியாயத்தை பொட்டில் அறைவது போல கூறி உண்மையை புரிய வைக்கலாம். மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் புதிய புரிதலை ஏற்படுத்தவும் செய்யலாம்.
பாதிக்கப்பட்டதாக கருதுபவர்களும் சரி, தெரியாமல் பிறருக்கு தீங்கு இழைத்ததாக வருந்துபவர்களும் சரி இங்கு தங்கள் கதையை சமர்பித்து உறுப்பினர்கள் வழங்கும் தீர்ப்பை கேட்கலாம்.
பிறரிடம் சொல்ல முடியாத ரகசியத்தையும் இங்கே பகிரலாம். யாரிடமாவது சொல்ல நினைப்பவற்றையும் பகிரலாம். இல்லை உரையாடலில் ஈடுபட விரும்பும் விஷயத்தையும் பகிரலாம்.

உறுப்பினராவது மிகவும் சுலபம். உறுப்பினரான பின் மனதில் உள்ளதை சுருக்கமாக அல்லது விரிவாக அவரவர் விருப்பத்திற்கேற்ப கதை போல பகிர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு பகிரப்படும் கதைகள் அவற்றின் தன்மைக்கேற்ப பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. சர்சைக்குறியவை, குடும்பம் சார்ந்தவை, நட்பு சார்ந்தவை, உறவு தொடர்பானவை என கதைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குகள் அதிகம் பெறுபவை மற்றும் புதியவை என்றும் கதைகள் முன்னிறுத்தப்படுகின்றன.
மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள், சண்டைகோழிகள், மெல்லிய மனம் கொண்டவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். நான் செய்தது தவறா என கேட்க நினைப்பவர்களும் பயன்படுத்தலாம். நான் தவறு செய்தேனா என் கேட்க நினைப்பவர்களும் பயன்படுத்தலாம்.
உள்ளத்தில் உள்ளதை கொட்ட நினைப்பவர்கள் மட்டும் அல்ல மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க நினைப்பவர்கள் இங்கு சமர்பிக்கப்படும் கதைகளை படித்து தீர்ப்பு வழங்கலாம்.
சுவாரஸ்யமான தளம் தான். நான் செய்தது சரியா என இணையவாசிகளிடம் கேட்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் இதன் நோக்கம். ஆனால் நடைமுறையில் எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.
முதலில் இந்த தளம் தொடர்ந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு அதன் பின்னே ஒரு உயிரோட்டமான சமூகம் உருவானால் தான் பகிர்வதிலும் கருத்து கேட்பதிலும் பயன் இருக்கும்.
அதோடு பகிர்வும் உண்மையாக இருக்க வேண்டும். கருத்துக்களும் நேர்மையானதாக இருக்க வேண்டும். ரகசியம் என்ற பெயரில் கற்பனை கதைகளோ ஆபாச குவியலோ பகிரப்பட்டால் இதன் நோக்கமே வீணாகிவிடலாம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


உலகிலேயே மிகச் சிறிய, அதாவது ஒரு மூலக்கூறு அளவிலேயே உள்ள நுண்ணிய எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார்கள் வேதியியல் விஞ்ஞானிகள்..
மருத்துவப் பொறியியல் சார்ந்த மிகச் சிறிய உபகரணங்களை, உருவாக்குவதில் இந்தக் கண்டுபிடிப்புப் பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது.
டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்சார மோட்டார், வெறும் ஒரு `நானோமீட்டர்’ குறுக்களவு கொண்டது. இதற்கு முந்தைய சாதனை, 200 நானோமீட்டர் அளவு கொண்ட மோட்டாராகும்.
“ஒளி மற்றும் வேதிவினைகளால் செயல்படும் மூலக்கூறு அளவு மோட்டார்களை உருவாக்குவதில் ஏற்கனவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மின்சாரத்தால் இயங்கும் மூலக்கூறு அளவு மோட்டார் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. ஓர் ஒற்றை மூலக்கூறுக்கும் மின்சாரத்தைச் செலுத்த முடியும், இயங்க வைக்க முடியும் என்று நாங்கள் காட்டியிருக்கிறோம்” என்கிறார், டப்ட்ஸ் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் ஈ. சார்லஸ் எச் ஸ்கைக்ஸ்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


உலகில் கூகுள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் தேடல் தளச் சந்தையில் புதிய, கூடுதல் வசதிகளுடன், மாறுபட்ட வகையில் முடிவுகளைத் தரும் தேடல் தளமாக அறிமுகமாகி யுள்ளது ஹீலியாட். தேடல் முடிவுகளைத் தருவதில், புதிய வழிகளை இது மேற்கொள் கிறது. நம் தேடல்களுக்கான முடிவுகளை அப்படியே பட்டியலிடாமல், அவற்றை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் ஒரு வண்ணத்திலான வட்டத்தைக் கொடுத்து, தகவல் களைக் காட்டுகிறது. இதனால், நாம் என்ன நோக்கத்திற்காக ஒரு சொல் கொண்டு தேடினாலும், அந்த நோக்கம் இங்கு ஏதேனும் ஒரு வகையாகக் காட்டப்படும். நமக்குத் தேவைப்படும் வண்ண வட்டத்தில் கிளிக் செய்தால், நம் தேவைகளுக்கான தளங்கள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், உங்கள் தேடல்களை வகைப்படுத்திக் காணுங்கள் என்று நமக்கு ஹீலியாட் உதவுவதை உணரலாம். எடுத்துக்காட்டாக, Apple என்று தேடியபோது “Stock Quote”, “Products”, “News”, “iPhone”, “iTunes”, “iPad”… எனப் பலவகைகளில் தகவல்களைப் பட்டியல் இடுகிறது. இவற்றில் நமக்கு எது வேண்டுமோ, அதனை மட்டும் கிளிக் செய்து காணலாம். தளங்கள் அனைத்தையும் பெற்று, சில நொடிகளில் அவற்றை வகைப்படுத்தித் தருவதே இந்த தேடல் சாதனத்தின் சிறப்பம்சம். இந்தத் தேடல் தளத்தின் முகவரி  .http://www.helioid.com.இங்கே சொடுக்கவும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


“மருத்துவமனைத் தகவல்களை விட, மிக அதிகமான அளவில் இந்தப் பாதிப்பு காணப்படுகிறது. கபாபென்டினால் ஏற்படும் `அனார்கேஸ்மியா’ (உறவின்போது உச்சமகிழ்ச்சியை அடைய முடியாத நிலை), வயது முதிர்ந்தவர்களிடம் பரவலாகக் காணப்படலாம்” என்கிறார், மைக்கேல் டி. பெர்லோப். அமெரிக்கா பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை உதவிப் பேராசிரியர் இவர்.
“எந்த அளவு கபாபென்டின் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அனார்கேஸ்மியா பாதிப்பு ஏற்படுகிறது. கபாபென்டின் அளவு குறைக்கப்படும்போது, அல்லது நிறுத்தப்படும்போது சம்பந்தப்பட்டவர்களால் மீண்டும் உச்ச மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது” என்று தெரிவிக்கிறார், பெர்லோப்.
குறைவான பக்க விளைவுகள், தூக்கக் கலக்க மந்தம், கிறுகிறுப்பு போன்றவற்றை விரைவாகக் குணப்படுத்தும் திறன் ஆகியவற்றால் பல ஆண்டுகளாக விரும்பப்படும் மாத்திரையாக `கபாபென்டின்’ உள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கபாபென்டின் எடுத்துக்கொள்ளும் 50 வயதைத் தாண்டியவர்களில் 11 பேரில் மூவர், `அனார்கேஸ்மியா’ நிலைக்கு உள்ளாவது தெரியவந்திருக்கிறது.
ஆனால் அதேநேரம், இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்ட 1993-ம் ஆண்டில் இருந்து, சராசரியாக 38 வயதுள்ளவர்களில் 10 பேர்தான் `அனார்கேஸ்மியா’ பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
“அனார்கேஸ்மியா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு, இது சரிசெய்யக்கூடியது, அதற்கேற்ப `டோஸ்’ அளவை மாற்றினால் போதும் என்ற தெம்பு அளிக்கப்பட வேண்டும்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார், பேராசிரியர் பெர்லோப்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.
வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


`ஜியோமெட்ரி’ என்ற கணித முறை வந்தபிறகுதான் கணிதத் துறையில் பல குழப்பங்களும், சிக்கல்களும் தீர்ந்தன. முக்கியமாக, பலவித கோணங்களில் அளந்து கணக்கிடுவதற்கு ஜியோமெட்ரி முறை மிகவும் பேருதவியாக இருக்கிறது.
கிரேக்க மொழியில் `ஜியோமெட்ரி’ என்பதற்கு நிலத்தை அளத்தல் என்று பொருள். எகிப்து நாட்டில் பல்வேறு கோணங்களில் பரவிக் கிடந்த விளைநிலங்களை அளந்து ஒழுங்குபடுத்துவது பெரிய பிரச்சினையாக இருந்தது. `ஜியோமெட்ரி’ முறை தோன்றிய பிறகு அந்தப் பிரச்சினை தொடர்பான சிக்கல்கள் அகன்றுவிட்டன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜியோமெட்ரி முறையைக் கண்டறிந்து உலகத்துக்கு முதன்முதல் அறிமுகப்படுத்திய அறிஞர் பெயர் `யூக்லிட்’ ஆகும். ஆனால் அந்தக் கிரேக்க அறிஞரின் வாழ்க்கையைப் பற்றிய சரியான வரலாறு கிடைக்கவில்லை. அவர் எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் என்ற தகவல்கள் கூடத் தெரியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் அவர் வாழ்ந்தார் என்ற தகவல் மட்டுமே கிடைத்திருக்கிறது.
யூக்லிட் எழுதிய `மூல தத்துவங்கள்’ என்ற நூல், கிரேக்க மொழியில் இருந்து உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூல் 1570-ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல், இன்றளவும் பெருஞ்செல்வாக்குப் பெற்றதாகத் திகழ்கிறது என்பதில் இருந்தே இதன் சிறப்புப் புரிகிறது அல்லவா? அந்த நூல்தான் `ஜியோமெட்ரி’ கணிதத்தின் அடிப்படையாகும்.
கிரேக்க நாட்டில் அலெக்சாண்ட்ரியா நகரத்தில் யூக்லிட் பிறந்தார் என்று கருதப்படுகிறது. அந்நகரில், எகிப்து ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற ஒரு பள்ளியில் கணிதவியலைப் போதித்து வந்தார் யூக்லிட்.
யூக்லிட் எழுதிய மூல தத்துவங்கள் நூல், உலகத்தில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக விற்பனையுடையதாக இருந்தது.
இன்றும் கூட, ஜியோமெட்ரி கணித முறை அடிப்படையில்தான் கடலில் கப்பல்களைச் செலுத்துகிறார்கள். ஆகாயத்தில் விமானம் தடம் மாறிச் செல்லாமல் நேர்வழியில் செல்லவும் இந்த கணித முறையே உதவுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


எடை மற்றும் அளவு குறைவாக வடிவமைக்கப்பட்டு, பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை லேப்டாப், நோட்புக் கம்ப்யூட்டர்கள் பிடித்தன. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் தயாரித்த நிறுவனங்கள், அவற்றின் தடிமனை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து, இந்த போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.இவ்வளவுதானா?
சென்ற மே மாதம் நடைபெற்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பக் கண்காட்சியில், இன்டெல் நிறுவனம், மிக மிக எடை குறைந்த, ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனில் இனி கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்படும் என்று அறிவித்தது. இது அதிக நேரத்திற்கு மின்சக்தி வழங்கும் பேட்டரியைக் கொண்டு, உடனடி யாக புரோகிராம்களைச் செயல் பாட்டிற்குக் கொண்டு வரும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அறிவித்தது. இதனை அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் என்றும் பெயரிட்டது.
இப்போது மிக மிக குறைந்த தடிமனில் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் என்ற பெயரில், புதியதாக கம்ப்யூட்டர்களை வடிவமைப்பதில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதனை அல்ட்ரா போர்ட்டபிள் லேப்டாப் (Ultra Portable Laptop) எனவும் அழைக்கின்றனர். இவை தற்போது வேகமாக வளர்ந்து வரும் நோட்பேட் கம்ப்யூட்டருக்குப் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன் முதலில் ஆப்பிள் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், தன் ஐபேட் கம்ப்யூட்டரை வெளியிட்ட போது, அதன் மெல்லிய வடிவமைப்பிலும், குறையாத பயன் பாட்டிலும் மயங்கிய மக்கள் பெரும் அளவில் அவற்றை வாங்கிப் பயன்படுத்தினர். இதனால், கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் நோட்பேட் கம்ப்யூட்டரைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தன.
இப்போது டேப்ளட் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட தாகவும், அழகாகவும் இந்த அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் அசூஸ் (Azus) நிறுவனம் இந்த அல்ட்ரா புக் கம்ப்யூட்டரை முதன் முதலில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்று தெரிகிறது. ASUS UX21 என்ற பெயருடன் வரும் 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது கிடைக்கலாம். அநேகமாக இது ரூ.45,000 முதல் ரூ.50,000 வரையில் விலையிடப்படும். இதனைத் தொடர்ந்து ஏசர் (Acer) நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கி யுள்ளது. அடுத்ததாக ஏசர் (Acer) நிறுவனம் Acer Aspire 3951 என்ற பெயரில் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் ஒன்றை விரைவில் கொண்டு வரும் எனவும் உறுதியாகத் தெரிகிறது.
அல்ட்ரா புக் கம்ப்யூட்டர் வடிவமைப்பின் பின்னணியில் இன்டெல் நிறுவனத்தின் முயற்சி அதிகமாக இருக்கிறது. இதற்கான தொழில் நுட்ப வளர்ச்சிக்கென 30 கோடி டாலர் நிதியகம் ஒன்றை இன்டெல் ஏற்படுத்தி, ஆய்வினை மேற்கொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது. 2012 இறுதிக்குள், தற்போதுலேப்டாப் பயன்படுத்தி வருபவர்களில் 40% பேரை அல்ட்ராபுக் கம்ப்யூட்டருக்கு மாற்ற இன்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஒரு அல்ட்ராபுக் கம்ப்யூட்டரின் தடிமன் ஒரு அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும். உலோகக் கலப்பிலான வெளிப்பக்கங்கள் கொண்ட இதன் எடை ஒரு கிலோ அளவில் இருக்கலாம். 11 முதல் 13 அங்குல டிஸ்பிளே திரை கிடைக்கும். பின்புற ஒளியுடன் கூடிய கீ போர்டு, யு.எஸ்.பி. 2 அல்லது 3 வசதி கொடுக்கப்படும். இதில் டிவிடி ட்ரைவ் இருக்காது. (இனிமேல் எந்த கம்ப்யூட்டரிலும் இது இருக்குமா என்பது சந்தேகமே!)
இந்த அல்ட்ராபுக் கம்ப்யூட்டருக்குப் போட்டியாக இப்போதே ஒன்று போர்ட்டபிள் கம்ப்யூட்டர் சந்தையில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன் பெயர் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் இல்லை என்றாலும், அதன் அனைத்து அம்சங்களும் இதில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்னும் கம்ப்யூட்டராகும். நெடுநேரம் மின்சக்தி தக்க வைத்து தரும் பேட்டரி, குறைவான தடிமன் என இந்த கம்ப்யூட்டரும் உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் 9 என்ற வகைக் கம்ப்யூட்டரும் இதே போன்றதே என்று எண்ணப்படுகிறது.
அல்ட்ராபுக் கம்ப்யூட்டரின் அம்சங்கள் என்னவாகும் இருக்கும் என்று தேடியபோது, கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன. இன்டெல் நிறுவனத்தின் Core i3/i5/i7 ப்ராசசர்களில் ஒன்று, 160 ஜிபி சாலிட் ஸ்டேட் ஹார்ட் டிஸ்க், புளுடூத் 4.0., குறைந்தது 6 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் பேட்டரி, 13.3 அங்குல திரை, 13மிமீ தடிமன் மற்றும் எடை 1.4 கிலோவிற்கும் குறைவாக இது அமையும். திரையின் ரெசல்யூசன் 1366×768 பிக்ஸல்களாக இருக்கலாம். எடை குறைந்த, தடிமன் அதிகம் இல்லாத கம்ப்யூட்டர் என்றால், யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்!
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


 தொலைக்காட்சியில் அதிகமான விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி.
சர்வதேச பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரையே டோனி பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்பது ஆச்சரியச் செய்தி.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 24 நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி விளம்பரத்தில் `பளீரிட்டிருக்கிறார்’ டோனி. அதேநேரம் ஷாருக்கான் 16 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும், சச்சின் 15 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும் தோன்றியிருக்கின்றனர். ஊடக ஆய்வு ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சச்சின், ஷாருக்கானை மட்டுமல்ல, மேலும் பல பாலிவுட் அழகுத் தாரகைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார் டோனி. பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்களில் இந்த முன்னணி நடிகைகள் மட்டும் 45 சதவீதப் பங்கை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் டி.வி. பிரியராக இருந்தால், கரீனா கபூர், சோனம் கபூர், கஜோல், ஐஸ்வர்யா ராய் ஆகியோரே சின்ன திரையில் அடிக்கடி புன்னகைக்கும் அழகு நட்சத்திரங்கள் என்று அறிந்திருப்பீர்கள்.
முன்பு குறிப்பிட்ட ஆய்வின்படி, பிரபலங்கள் தோன்றும் டி.வி. விளம்பரங்களில் இந்தி நடிகர், நடிகையர் 42 சதவீதத்தையும், விளையாட்டு நட்சத்திரங்கள் 10 சதவீப் பங்கையும் வகிக்கின்றனர்.
தனது நீண்ட விளம்பரப் பட்டியலை இரண்டாண்டு காலத்துக்கு நிர்வகிப்பதற்கு `ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் அண்ட் மைண்ட்ஸ்கேப்ஸ்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஜூலையில் 210 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டோனி.
இந்திய விளையாட்டுலக வரலாற்றிலேயே இது ஒரு புதிய சாதனை. 2006-ம் ஆண்டில் `ஐகானிக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் சச்சின் தெண்டுல்கர் மூன்றாண்டு காலத்துக்கு ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் போட்டதே இதற்கு முன் அதிகபட்சமாக இருந்தது.
டோனி, கிரிக்கெட் களத்தில் நாயகனாகத் திகழும் வரை, அவரை விளம்பர உலகிலும் யாரும் அசைக்க முடியாது என்பது உறுதி!
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati