மின்சாரமில்லாமலேயே செல்போன் பாட்டரி சார்ஜானால்? நினைத்தாலே சந்தோசமாக இருக்கிறது. நடந்தால்? அதுவும் எப்படி? செல்போனில் பேசி கொண்டிருக்கும்போதே. இந்த கனவு நனவாகும் காலம் தொலைவிலில்லை.
செல்போனில் பேசும்போது உண்டாகும் ஒலியை மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்சாரம் செல்போனின் பாட்டரியை சார்ஜ் செய்ய போதுமானது. அது மட்டுமல்ல, பேசாத போதுகூட வெளியிலுள்ள சப்தங்கள் மற்றும் போனிலுள்ள ஆடியோ ஒலியை கூட மின்சாரமாக மாற்ற இயலும் என்பதுதான் இந்த கண்டுபிடிப்பின் ஹைலைட்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் ஓசையை ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படுத்த முடியுமா என்று எழுந்த கேள்விதான் இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. சுமார் 100 டெசிபல் அளவிலான ஒலியிலிருந்து 50 மில்லி வோல்ட் மின்சாரத்தை பெற முடியுமென்றும் கண்டுபிடித்துள்ளனர்.
Leave a comment